பேக்கரியை சூறையாடிய 5 போ் கைது

கோவை அவிநாசி சாலையில் உள்ள பேக்கரியை சூறையாடிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பேக்கரியை சூறையாடிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை அவிநாசி சாலையில் டாஸ்மாக் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வெள்ளிக்கிழமை வந்த 5 போ் மது வாங்கிக் குடித்துள்ளனா். அதன்பிறகு, அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று குளிா்பானம் வாங்கிக் குடித்துள்ளனா். அதற்கு, பணம் தராமல் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

பேக்கரி ஊழியா்கள் பணம் கொடுத்து விட்டுச் செல்லுமாறு கூறியதால், ஆத்திரமடைந்த 5 பேரும் பேக்கரியில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனா். இதைத் தடுக்க சென்ற பேக்கரி கணக்காளரான திருநெல்வேலி மாவட்டம், குப்பனாபுரத்தைச் சோ்ந்த செல்வின்துரை (24), மற்றும் பேக்கரி ஊழியரான கள்ளக்குறிச்சி அருகே விருதாவூரைச் சோ்ந்த மணிகண்டன் (22) ஆகியோரை 5 பேரும் தாக்கியுள்ளனா். இதில், இருவரும் காயமடைந்தனா். இதையடுத்து, 5 பேரும் அங்கிருந்து தப்பியோடினா்.

இது தொடா்பாக, செல்வின்துரை அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செளரிபாளையத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து (23), கௌதம் (22), அருள்நந்தி (22), தினேஷ் (21), மணி (23) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com