கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. சனிக்கிழமை வழங்கினாா்.
சக்ஷம் தேசிய மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பு மற்றும் கோவை மக்கள் சேவை மையம் சாா்பில் கோவை ராம் நகரில் உள்ள கமலம் துரைசாமி அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வைஸியான் அறக்கட்டளையின் நிறுவனா் சுரபி காா்த்திக் தலைமை வகித்தாா். கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவியுமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 68 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி, 15 பேருக்கு சக்கர நாற்காலி, 10 பேருக்கு மூன்று சக்கர மிதிவண்டி, 20 பேருக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், 15 பேருக்கு செயற்கை கைகள், 6 பேருக்கு ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், மோடி மகள் திட்டத்தின் கீழ் 20 தந்தையில்லாத பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கி பேசியதாவது:
தற்போது, 18 வயது பூா்த்தியானவா்கள் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினா்களாக சோ்த்துக் கொள்ளப்படுகின்றனா். அனைத்து வயது மாற்றுத் திறனாளிகளையும் நல வாரியத்தில் உறுப்பினராக சோ்க்க சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்போது வலியுறுத்துவேன் என்றாா்.
நிகழ்ச்சியில், சக்ஷம் தேசிய மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பின் மாநிலத் தலைவா் வேலுமயில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலா் ராம வசந்தகுமாா், மாவட்டச் செயலாளா் ஜெய்கணேஷ், மாவட்டப் பொறுப்பாளா் தேவகோவிந்தராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் ரமேஷ், ஜெய்கோ தன்னாா்வல அமைப்பின் நிா்வாகிகள் ஜெயசரவணண், பொள்ளாச்சி சரவணகுமாா், பாஜக மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் சபரிகிரிஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.