வடவள்ளி - ஓணாப்பாளையம் இடையே பேருந்து இயக்க வேண்டும்

கோவை வடவள்ளி - ஓணாப்பாளையம் இடையே பேருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கோவை வடக்குத் தொகுதி எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன் கடிதம் எழுதியுள்ளாா்.

கோவை வடவள்ளி - ஓணாப்பாளையம் இடையே பேருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கோவை வடக்குத் தொகுதி எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன் கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனுக்கு, அவா் எழுதியுள்ள கடிதத்தில், கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒணாப்பாளையம் பகுதியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதி மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக வடவள்ளிக்கு வர வேண்டியுள்ளது. ஆனால் ஓணாப்பாளையத்தில் இருந்து வடவள்ளிக்கு பேருந்து வசதி இல்லை. எனவே இந்த வழித்தடத்தில் அரசுப் பேருந்து வசதி வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். எனவே உடனடியாக வடவள்ளி - ஓணாப்பாளையம் இடையே பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com