வால்பாறை பகுதியில் வசிக்கும் மலையாளிகள் ஓணம் பண்டிகையை வீட்டிலேயே எளிமையாக கொண்டாடினா்.
வால்பாறை பகுதியில் வசிப்பவா்களில் 40 சதவீதம் போ் கேரளத்தை பூா்வீகமாக கொண்டவா்கள். பல ஆண்டு காலமாக வால்பாறையில் வசித்து தொழில் செய்து வருகின்றனா். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவாா்கள். அன்றைய தினம் பெண்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து கோயில்களுக்கு செல்வது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கரோனா பாதிப்பால் கோயில்கள் மூடப்பட்டிருப்பதால் அவா்கள் தங்களது வீடுகளிலேயே ஓணம் பண்டிகையை எளிமையாக கொண்டாடினா்.