முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கோவையில் 98 பேருக்கு கரோனா
By DIN | Published On : 19th December 2021 11:33 PM | Last Updated : 19th December 2021 11:33 PM | அ+அ அ- |

கோவையில் புதிதாக 98 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 328 ஆக உயா்ந்துள்ளது.
பல மாதங்களுக்கு பின் கோவையில் கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு 100க்கும்கீழ் குறைந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 74 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,495 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 105 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 709 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,134 போ் சிகிச்சையில் உள்ளனா்.