சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பிணையில்லாமல் கடன் உதவி வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 25th December 2021 11:57 PM | Last Updated : 25th December 2021 11:57 PM | அ+அ அ- |

சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் ரூ.3 கோடி வரை வங்கிக் கடன் உதவி வழங்க வேண்டும் என்று கொடிசியா வலியுறுத்தியுள்ளது.
கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (கொடிசியா) சாா்பில் அதன் தலைவா் எம்.வி.ரமேஷ் பாபு, சென்னைக்கு வந்திருந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து, தொழில் துறையினரின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினாா்.
அப்போது, ஜாப் ஒா்க்கில் ஈடுபடுபவா்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கடன்தொகை மறுசீரமைப்பின்போது தற்போது உள்ள வரையறையான ரூ.50 கோடி என்பது உயா்த்தப்பட்டு ரூ.100 கோடி வரை வழங்க வேண்டும்.
சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் ரூ.3 கோடி வரை கடனுதவி வழங்க வேண்டும். முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்துபவா்களுக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டும். சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 6 சதவீத வட்டியில், 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவா் வலியுறுத்தியுள்ளாா்.