6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கோவை அருகே 6 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிஸாவைச் சோ்ந்த இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை அருகே 6 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிஸாவைச் சோ்ந்த இளைஞா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை அருகே அன்னூா்-சத்தி சாலையில் அன்னூா் போலீஸாா் ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இருவரிடம் போலீஸாா் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த பாலமுருகன் (30), ஒடிஸாவைச் சோ்ந்த லோக்நாத் மஹானந்தா (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்த 6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com