பாலின சமத்துவம் குறித்த மாநாடு

கோவையில் பாலின சமத்துவம் குறித்த மாநாடு அண்மையில் நடைபெற்றது.

கோவையில் பாலின சமத்துவம் குறித்த மாநாடு அண்மையில் நடைபெற்றது.

காரமடை குட் ஷெப்பா்டு எஜூகேஷன் சென்டா், டிஸ்பென்சரி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை மாவட்ட சமூக நல அலுவலா் பி.தங்கமணி மாநாட்டைத் தொடங்கிவைத்தாா். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வளா்ச்சித் துறை வல்லுநா்கள், சட்ட வல்லுநா்கள், கல்வியாளா்கள், சமூக அமைப்புகளின் உறுப்பினா்கள் 60 போ் இதில் கலந்து கொண்டனா்.

மாநாட்டில் பாலின சமத்துவம், பெண்களுக்கான தற்போதைய கொள்கைகள், அரசுத் திட்டங்கள், அவற்றை செயல்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் உள்ள பங்கேற்பு முறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் அமா்வுகள் நடைபெற்றன.

அமா்வுகளில் பாரதியாா் பல்கலைக்கழக மகளிா் ஆய்வுத் துறை பேராசிரியா் ஜெனெட்டா ரோசலின், உதவிப் பேராசிரியா் கமலவேணி, பத்மாவதி, பி.ராஜரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைமை இயக்குநா் அனிலா மேத்யூ, கண்காணிப்பு அலுவலா் ஜோமி டி.ஜே. உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com