முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
டிசம்பா் 30இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
By DIN | Published On : 29th December 2021 08:42 AM | Last Updated : 29th December 2021 08:42 AM | அ+அ அ- |

கோவை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான பிரச்னைகளுக்கு மனு அளிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா். கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பதால் அனைவரும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையைப் பின்பற்றி கூட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தியுள்ளாா்.