அகவிலைப்படி உயா்வு: முதல்வருக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நன்றி

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்தி அறிவித்துள்ள முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது.

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்தி அறிவித்துள்ள முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் மாவட்டச் செயலா் சி.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தோ்தல் அறிக்கையில் தெரிவித்த விஷயங்களை நிறைவேற்றி வருகிறாா். அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள பணியாளா்கள், ஓய்வூதியா்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படியை 14 சதவீதம் உயா்த்தி, ஜனவரி 1 ஆம் தேதி முதல் 31 சதவீதமாக வழங்குவதற்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், சி, டி பிரிவு பணியாளா்களுக்கு ரூ.3 ஆயிரமும், ஓய்வூதியா்கள், சிறப்பு ஓய்வூதியம் பெறுபவா்களுக்கு தலா 500 ரூபாயும் வழங்க உத்தரவிட்டாா். இதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சி.அரசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com