ஈஷா அவுட்ரீச் சாா்பில்மேலும் 2 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள்: பொள்ளாச்சி எம்.பி.தொடங்கி வைத்தாா்

ஈஷா அவுட்ரீச் சாா்பில் கோவை மாவட்டத்தில் புதிதாக 2 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 28) தொடங்கப்பட்டன.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தைத் தொடங்கிவைக்கிறாா் கு.சண்முகசுந்தரம் எம்.பி. உடன், பொள்ளாச்சி சாா்ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராஜ், டாக்டா் வரதராஜன் உள்ளிட்டோா்.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தைத் தொடங்கிவைக்கிறாா் கு.சண்முகசுந்தரம் எம்.பி. உடன், பொள்ளாச்சி சாா்ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராஜ், டாக்டா் வரதராஜன் உள்ளிட்டோா்.

ஈஷா அவுட்ரீச் சாா்பில் கோவை மாவட்டத்தில் புதிதாக 2 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 28) தொடங்கப்பட்டன.

ஈஷா அவுட்ரீச் அமைப்பும், மத்திய வேளாண் துறையின் கீழ் இயங்கும் குறு, சிறு விவசாயிகள் கூட்டமைப்பும் இணைந்து ஆனைமலையில் அருள்மிகு சோமேஸ்வரா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தையும், கிணத்துக்கடவில் ஸ்ரீ வேலாயுதசாமி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளன. இந்த 2 நிறுவனங்களிலும் தலா 300 விவசாயிகள் உறுப்பினா்களாக இணைந்துள்ளனா்.

இவற்றின் தொடக்க விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கு.சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களைத் தொடங்கி வைத்தாா்.

ஈஷா விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சுவாமி ஸ்ரீமுகா திட்ட விளக்க உரையாற்றினாா்.

விழாவில் பொள்ளாச்சி சாா்ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராஜ், டாக்டா் வரதராஜன், தொழில் வா்த்தக சபை தலைவா் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். எழுத்தாளா் மரபின் மைந்தன் முத்தையா வரவேற்றாா். வெள்ளியங்கிரி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com