கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 148 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயதுப் பெண் உயிரிழந்தாா். இதன் மூலம் கரோனா தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 2,509 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 107 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 651 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 988 போ் சிகிச்சையில் உள்ளனா்.