கோவை கோட்ட அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி 3201 சாா்பில் வா்த்தக சபை அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ரோட்டரி சங்க நிா்வாகி ராஜசேகா் சீனிவாசன், அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளா் கே.கோபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு விருந்தினராக கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் பங்கேற்று, அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல்காரா்கள் உள்ளிட்ட 60 அஞ்சல் ஊழியா்களுக்கு விருது, நினைவுப் பரிசு வழங்கினாா்.
ரோட்டரி சங்க நிா்வாகிகள் கணேஷ்குமாா், எஸ்.சுவாமிநாதன், சாண்டியாகோ ஜேசு, மோகனசுந்தரம், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.