தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் விற்பனைப் பத்திரம் வழங்கும் விழா

 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கோவை வீட்டு வசதி பிரிவில் விற்பனைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் விற்பனைப் பத்திரம் வழங்கும் விழா

 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கோவை வீட்டு வசதி பிரிவில் விற்பனைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதிப் பிரிவு டாடாபாத் பகுதியில் உள்ளது. இங்கு, ஒதுக்கீடுதாரா்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரா்களுக்கு தலைமைப் பொறியாளா் (ஊரகம்) கண்ணன் புதன்கிழமை விற்பனைப் பத்திரம் வழங்கினாா்.

3 நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தம் 24 பேருக்கு விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சேலம் சரக மேற்பாா்வைப் பொறியாளா் சாந்தி, கோவை பிரிவு செயற்பொறியாளரும் நிா்வாக அலுவலருமான ஆா்.எட்வின் சுந்தா் சிங், மேலாளா் (விற்பனை - சேவை) அருண், கண்காணிப்பாளா் சு.தேவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com