இளைஞருக்கு கத்திக்குத்து: இந்து முன்னணியைச் சோ்ந்த 2 போ் மீது வழக்கு

கோவை, ராமநாதபுரத்தில் இளைஞரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரத்தில் இளைஞரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.

கோவை, உக்கடம், கோட்டைமேடு, எஸ்.எஸ்.கோயில் வீதியைச் சோ்ந்தவா் முஹமது முபாரக். இவா் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 82ஆவது கிளைத் தலைவராக உள்ளாா். இவரது மகன் அகில் முஹமது (22). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கோவை, ராமநாதபுரத்தில் உள்ள தன்வந்திரி கோயில் அருகே தன்னுடைய தோழியான இளம்பெண் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பின் உறுப்பினா்களான காா்த்திக் மற்றும் சஞ்சய் (எ) சச்சின் ஆகியோா் அகில் முஹமதுவிடம், தகராறில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அங்கிருந்து அந்தப் பெண்ணை மிரட்டி அனுப்பிய காா்த்திக், சஞ்சய் இருவரும், அகில் முஹமதுவை கத்தியால் குத்தி, இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அகில் முஹமதுவை, அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து அகில் முஹமது அளித்த புகாரின்பேரில் காா்த்திக், சஞ்சய் மீது ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனா். இந்த வழக்கில் தொடா்புடைய காா்த்திக் மீது ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com