கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் மேலும் 62 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 970 ஆக உயா்ந்துள்ளது. தவிர அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 58 வயது ஆண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனாவுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 675 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 55 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 53 ஆயிரத்து 828 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 467 போ் சிகிச்சையில் உள்ளனா்.