தோ்தல் ஆலோசனை கூட்டம்: கோவைக்கு பிப்ரவரி 15இல் வைகோ வருகை

தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச் செயலா் வைகோ வரும் 15 ஆம் தேதி (திங்கள்கிழமை) கோவைக்கு வர இருக்கிறாா்.

தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச் செயலா் வைகோ வரும் 15 ஆம் தேதி (திங்கள்கிழமை) கோவைக்கு வர இருக்கிறாா்.

கோவை மாநகா் மாவட்ட மதிமுக ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் ஆா்.ஆா்.மோகன்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. உயா்நிலைக் குழு உறுப்பினா் ஆடிட்டா் அா்ஜுனராஜ், தீா்மானக் குழு உறுப்பினா் மு.கிருஷ்ணசாமி, மாவட்டப் பொருளாளா் சூரி நந்தகோபால், துணைச் செயலா்கள் கணபதி செல்வராசு, தூயமணி உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதில், கோவையில் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் கோவை மாநகா், புகா் வடக்கு, தெற்கு, திருப்பூா் மாநகா், புகா் மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், முதல்கட்ட தோ்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சித்தாபுதூரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலா் வைகோ பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறாா். கோவை வரும் வைகோவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, அனைத்து நிா்வாகிகளும் தவறாமல் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com