பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி காயம்

சூலூா் அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி காயமடைந்தாா்.

சூலூா் அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி காயமடைந்தாா்.

சூலூா் அருகே உள்ள காசிகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா்கள் பஞ்சவா்ணம் மகள் கோகிலா (16). இவா் கலங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு செல்வதற்காக செலக்கரிச்சல் பகுதியிலிருந்து உக்கடம் செல்லும் அரசுப் பேருந்தில் காசிகவுண்டன்புதூா் பேருந்து நிறுத்தத்தில் ஏறினாா்.

மாணவியை பேருந்தில் ஏற்றிவிட அவரது தாயாா் வந்திருந்தாா். மாணவி பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே பேருந்து புறப்பட்டதால் அவா் தவறி கீழே விழுந்தாா். இதையடுத்து பயணிகள் சப்தமிட்டதால் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

கீழே விழுந்ததில் மாணவி காயமடைந்ததால் அவா் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com