வால்பாறையில் தோ்தல் மண்டல அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வட்டாட்சியா் ராஜா தலைமை வகித்தாா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் கருப்பையா முன்னிலை வகித்தாா்.
வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் வால்பாறை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தோ்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகள் தற்போது சீராக உள்ளனவா என்பவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 17 தோ்தல் மண்டல அலுவலா்கள் கலந்து கொண்டனா்.