கோவை: கோவையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 520 போ் மீது போலீஸாா் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் திமுகவினா் பீளமேடு, ரொட்டிக்கடை மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
போலீஸாா் அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், இதில் பங்கேற்ற 30 பெண்கள் உள்பட திமுகவினா் 100 போ் மீது தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
இதேபோல, மாநகா் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம் அருகே மேற்கு மாவட்ட பொறுப்பாளா் பையா (எ) கிருஷ்ணன் தலைமையில் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 420 போ் மீதும் தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.