அமைச்சா் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வழக்குரைஞா்கள் புகாா்

சாதிய வன்மத்தோடு கருத்து தெரிவித்த சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வழக்குரைஞா்கள் மனு அளித்தனா்.

சாதிய வன்மத்தோடு கருத்து தெரிவித்த சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வழக்குரைஞா்கள் மனு அளித்தனா்.

இது குறித்து முக்குலத்தோா் சமுதாய வழக்குரைஞா்கள் சாா்பில் வழக்குரைஞா் காா்த்திக் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

அண்மையில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் குறித்து பேசுகையில், தனி நபா் தாக்குதலையும் தாண்டி, சாதிய வன்மத்தோடு சில கருத்துக்களைத் தெரிவித்தாா். அவரது கருத்துகள், சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த எங்களது சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இரு சமுதாய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் அமைச்சா் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com