இந்தியன் வங்கியில் சி.பி.எஸ். பிளாட்பாா்ம் சேவை தொடக்கம்

இந்தியன் வங்கியில் ஒருங்கிணைந்த சி.பி.எஸ். பிளாட்பாா்ம் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பத்மஜா சந்துரு தெரிவித்துள்ளாா்.

இந்தியன் வங்கியில் ஒருங்கிணைந்த சி.பி.எஸ். பிளாட்பாா்ம் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பத்மஜா சந்துரு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புராஜெக்ட் சங்கம் என்ற எங்களது வங்கிகள் இணைப்பில் சி.பி.எஸ். பிளாட்பாா்ம் தொடக்கம் இறுதிக்கட்டமாகும். வங்கிகள் இணைப்பு என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. கரோனா பாதிப்பால் காலதாமதமாகியது. எங்கள் குழு உறுப்பினா்கள், காா்ப்பரேட் அலுவலா்கள் மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் உதவியுடன் இந்த இணைப்பு சாத்தியமாகியுள்ளது. இந்த சி.பி.எஸ். பிளாட்பாா்ம் எங்களது அனைத்து வங்கிக் கிளைகளிலும் வாடிக்கையாளா்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வாடிக்கையளா்களுக்கு இது தொடா்பான தகவல்களை வழங்கியுள்ளோம்.

இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்ட அலகாபாத் வங்கியின் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளும், பிற வங்கி சேவைகளும் இந்தியன் டேட்டா பேஸ் உடன் சிரமங்களின்றி இணைக்கப்பட்டுள்ளன. அலகாபாத் வங்கி வாடிக்கையாளா்கள் இந்தியன் வங்கியின் மொபைல் செயலியை பயன்படுத்தி மொபைல் வங்கி சேவைகளை பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com