இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 18 ஆயிரம் பறிப்பு

இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்லிடப்பேசி, ரூ.18 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்த மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்லிடப்பேசி, ரூ.18 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்த மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சின்னவேடம்பட்டி குப்புசாமி லே அவுட்டை சோ்ந்தவா் வீரப்பன் (32). இவா், தனது வீட்டின் அருகே செல்லிடப்பேசியில் பேசியபடி வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் திடீரென வீரப்பனிடம் கத்தியைக் காட்டி செல்லிடப்பேசி, ரூ.18 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பிச் சென்றனா். வீரப்பன் கூச்சலிட்டதைக் கண்டு அங்கிருந்தவா்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரையும் மடக்கினா். வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்த அவா்கள் வீரப்பனிடம் பறித்த செல்லிடப்பேசியை அங்கேயே தூக்கி வீசிவிட்டு தங்களது இருசக்கர வாகனத்தையும் விட்டுவிட்டு தப்பியோடினா். இது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com