கோவை டாக்டா் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீடு, அங்கீகாரக் குழுவின் (நாக்) ஏ பிளஸ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய தர மதிப்பீடு, அங்கீகாரக் குழுவின் பேராசிரியா்கள் சஞ்சீவ் ஜெயின், குவாம்ருல் ஹஸன், சஞ்சய் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய குழுவினா் கடந்த 8, 9 ஆம் தேதிகளில் ஆய்வு நடத்தினா்.
கல்வி, கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இக்கல்லூரிக்கு ஏ பிளஸ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தைப் பெற பாடுபட்ட கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்களுக்கு கோவை மருத்துவ மைய மருத்துவமனையின் தலைவா் டாக்டா் நல்ல.ஜி.பழனிசாமி, செயலா் தவமணி பழனிசாமி, முதன்மைச் செயல் அலுவலா் ஓ.டீ.புவனேஸ்வரன் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.