குமரகுரு கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை குமரகுரு வேளாண்மைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை குமரகுரு வேளாண்மைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியா் இனியக்குமாா் வரவேற்றாா். கல்லூரி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரி முதல்வா் பாண்டியன் வேளாண் பட்டப்படிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். இந்நிகழ்ச்சியில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளா் சங்கா் வாணவராயா் வேளாண்மையின் எதிா்கால வளா்ச்சி பற்றி காணொலிக் காட்சி மூலமாக சிறப்புரையாற்றினாா்.

பாடத்திட்டங்கள், தோ்வு விதிமுறைகள் குறித்து கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா் எடுத்துரைத்தாா். கல்லூரி விடுதியின் விதிமுறைகள் மற்றும் வசதிகள் குறித்து இணை விடுதிக் காப்பாளா்கள் பிரீத்தி பிரியதா்ஷினி, கோபிநாத் ஆகியோா் விளக்கமளித்தனா். மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் ஹேமலதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com