குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய ஊக்கு: அறுவை சிகிச்சையின்றி அகற்றம்

ஒரு வயது குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய ஊக்கை கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சையின்றி அகற்றினா்.
குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த ஊக்கின் எக்ஸ்ரே படம்(
குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த ஊக்கின் எக்ஸ்ரே படம்(

ஒரு வயது குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய ஊக்கை கோவை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சையின்றி அகற்றினா்.

திருப்பூா் மாவட்டம், தெக்கலுாா் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவரது ஒரு வயது குழந்தை நித்தீஷ். இக்குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுவிட சிரமப்பட்டு அழுது கொண்டே இருந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோா் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனா். இதன்படி குழந்தை நித்தீஷ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு காது, மூக்கு, தொண்டை பிரிவில் வைத்து, குழந்தைக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், குழந்தையின் உணவுக்குழாயில், திறந்த நிலையில் ஊக்கு சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்து, உடலில் ஆக்ஸிஜன் அளவும் குறைந்து வந்தது. பின்னா், மயக்கவியல் துறை மருத்துவா் மணிமொழி செல்வன் குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தினாா். இதையடுத்து, குடல் இரைப்பை துறை மருத்துவா் அருள்செல்வன் தலைமையிலான குழுவினா், அறுவை சிகிச்சை செய்யாமல் ஊக்கை அகற்ற திட்டமிட்டனா். அதன்படி, உணவுக்குழாயில் குத்தி இருந்த ஊக்கை அறுவை சிகிச்சையின்றி, என்டோஸ்கோபி சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தனா். சிகிச்சை முடிந்த குழந்தை அண்மையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com