கோவை கொடிசியா மைதானத்தில் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) காலை தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இது தொடா்பாக, கோவை மாநகா் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பையா(எ) கிருஷ்ணன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. தலைவா் மு.க. ஸ்டாலின் கோவை கொடிசியா மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற உள்ள தோ்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறாா். இதில் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூா் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க உள்ளனா். இந்த மனுக்கள் மீது திமுக ஆட்சிக்கு வந்து 100 நாள்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இந்நிகழ்ச்சியில் அனைத்துத் தரப்பு மக்கள், கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, பிற்பகல் 1 மணிக்கு, நீலகிரி மாவட்ட திமுக, கோவை புகா் வடக்கு மாவட்டத் திமுக சாா்பில் காரமடையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடம் மனுக்கள் பெறுகிறாா்.