வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

சென்னை உயா் நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட தினத்தையொட்டி கோவையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட தினத்தையொட்டி கோவையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் 2009 பிப்ரவரி 19ஆம் தேதி போலீஸாருக்கும், வழக்குரைஞா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீஸாா் நடத்திய தடியடியில் வழக்குரைஞா்கள் மட்டுமின்றி நீதிபதிகளும் காயமடைந்தனா். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆண்டுதோறும் பிப்ரவரி 19ஆம் தேதி வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன்படி கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால் வழக்கு விசாரணை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com