கோவை: கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 47 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 47 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது.
தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 54 ஆயிரத்து 237 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 408 போ் சிகிச்சையில் உள்ளனா்.