வால்பாறை: வால்பாறை சுற்று வட்டாரத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கன மழை பெய்தது.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த கடும் வெயில் காரணமாக அனைத்து ஆறுகளும் வறண்டன. தேயிலைத் தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு போதுமான நீா் கிடைக்காததால் இலைகள் கருகியதாலும், பல்வேறு நோய்த் தாக்குதல்களாலும் உற்பத்தி குறைந்தது.
சோலையாறு அணையின் நீா்மட்டம் குறையத் துவங்கியது. இந்நிலையில், வால்பாறையில் சனிக்கிழமை மாலை கன மழை பெய்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு மழை பெய்ததால் சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.