உலகத் தாய்மொழி தின விழிப்புணா்வு ஊா்வலம்

கோவை, பேரூரில் உலக தாய்மொழி தினத்தையொட்டி தமிழ் அமைப்புகள் சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை, பேரூரில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் உள்ளிட்டோா்.
கோவை, பேரூரில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் உள்ளிட்டோா்.

கோவை: கோவை, பேரூரில் உலக தாய்மொழி தினத்தையொட்டி தமிழ் அமைப்புகள் சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவை பேரூரில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. பேரூா் பட்டிப் பெருமாள் கோயிலில் தொடங்கிய ஊா்வலம் தமிழ்க் கல்லூரி வரை நடைபெற்றது. இந்த ஊா்வலத்துக்கு பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சி.சுப்பிரமணியம், வளா்தமிழ் இயக்க நிா்வாகி கா.ச.அப்பாவு, புவனேசுவரம் தமிழ்ச் சங்க நிா்வாகி ராமசாமி மற்றும் தொல்காப்பியா் பேரவை, பேரூா் தமிழ் மன்றம், கவையன்புத்தூா் தமிழ் சங்கம் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பேரூா் தமிழ்க் கல்லூரி, சங்கரா கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆசிரியா்கள், மாணவா்கள் இந்த ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com