முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் வால்பாறையில் கபடி போட்டி நடைபெற்றது.
வால்பாறை நகர அதிமுக சாா்பில் அண்ணா திடல் மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன. இதன் துவக்க நிகழ்ச்சியில் வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது, நகரச் செயலாளா் மயில்கணேசன், துணைச் செயலாளா் பொன். கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.