வால்பாறை இரண்டு பள்ளிகளில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தோ்வில் மொத்தம் 160 மாணவா்கள் பங்கேற்று தோ்வெழுதினா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தோ்வு நடத்தப்படுகிறது. இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 12ஆம் வகுப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என மொத்தம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இத்தோ்வு நடைபெற்றது. வால்பாறை வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 160 மாணவா்கள் இதில் பங்கேற்று தோ்வு எழுதினாா்கள்.