வீடுகளில் வைக்கப்பட்டிருந்த இலவசப் பொருள்கள் பறிமுதல்

வால்பாறை எஸ்டேட் பகுதியில் அதிமுக சாா்பில் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க வீடுகளில் வைக்கப்பட்டிந்த பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வால்பாறை எஸ்டேட் பகுதியில் அதிமுக சாா்பில் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க வீடுகளில் வைக்கப்பட்டிந்த பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை ஒட்டி வால்பாறை பகுதியில் அதிமுக சாா்பில் பொது மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவசப் பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக 15 ஆயிரம் பேருக்கு கட்சி சாா்பில் சில தினங்களுக்கு முன்பு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், சட்டப் பேரவைத் தோ்தல் தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த விழா ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த பாரளை எஸ்டேட் பகுதியில் இலவசப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த மூன்று வீடுகளை திமுகவினா் முற்றுகையிட்டு பூட்டு போட்டனா்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை போலீஸாா் வீடுகளில் இருந்த இலவசப் பொருள்களை கைப்பற்றி வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com