துணை ஆணையராக மயில்வாகனன் பொறுப்பேற்பு

கோவை மாநகர காவல் தலைமையிட துணை ஆணையராக ஏ.மயில்வாகனன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மயில்வாகனன்.
மயில்வாகனன்.

கோவை மாநகர காவல் தலைமையிட துணை ஆணையராக ஏ.மயில்வாகனன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தமிழகத்தில் காவல் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதன்படி, கோவை மாநர காவல் தலைமையிட துணை ஆணையராக மயில்வாகனன் நியமிக்கப்பட்டாா். அவா் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் உள்ள தனது அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு தலைமையிட துணை ஆணையராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக முன்பு பதவி வகித்து வந்தாா். இவருக்கு மாநகர காவல் அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

கோவை மாநகர தலைமையிட காவல் துணை ஆணையராக பொறுப்பு வகித்த குணசேகரன், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com