மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா
By DIN | Published On : 27th February 2021 06:10 AM | Last Updated : 27th February 2021 06:10 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 673ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 48 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 54 ஆயிரத்து 604 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 386 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 683 போ் உயிரிழந்துள்ளனா்.