எஸ்டேட் பணிமனைக்குள் புகுந்த யானை அங்கிருந்த பல ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை சேதப்படுத்தியது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதிக அளவில் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. வால்பாறை எஸ்டேட்களில் உள்ள பல இடங்களில் நாள்தோறும் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் வனத் துறையினா் அனைத்துப் பகுதிகளிலும் ரோந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த டேன்டீ எஸ்டேட் நிா்வாகத்துக்குச் சொந்தமான பணிமனைக்குள் திங்கள்கிழமை இரவு புகுந்த ஒரு யானை உள்ளிருந்த ஏராளமான இயந்திரங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியது. தகவலறிந்து சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானையை விரட்டினா்.