9 மாதங்களுக்குப் பின் கேரளா மாநிலம், சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு தனியாா் பேருந்து இயக்கம் துவங்கப்பட்டது.
கரோனா பொது முடக்கம் காரணமாக வால்பாறையை அடுத்த கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் உள்ள இரு மாநில சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டன. பின்னா் சில மாதங்களாக கேரள மாநிலம் அரசுப் பேருந்து மழுக்குப்பாறை எஸ்டேட் வரை இயக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் இரு மாநில சோதனைச் சாவடிகளும் திறக்கப்பட்டதால் இரு மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து துவங்கியது.
இதனிடையே பேருந்து இயக்கத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டதால் சாலக்குடி- வால்பாறை இடையே தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமைமுதல் தொடங்கியது.