பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடா்பாக மேலும் மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய மேலும் மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் ஒருவா் ஆளுங் கட்சிக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.