வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், ரூ.1.5 லட்சம் திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி அருகே உள்ள பா்மா காலனியைச் சோ்ந்தவா் கணேஷ் (39). இவா் அதே பகுதியில் வாகனப் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறாா். ஜனவரி 8ஆம் தேதி குடும்பத்தினருடன் கணேஷ் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்துக்கு சென்றிருந்தாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி போலீஸாருக்கு கணேஷ் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் உள்ளிட்டவற்றை வரவழைத்து தடயங்களை சேகரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com