கோவை எல்.ஜி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகிகள் நேரடியாகவும், மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாகவும் இந்த விழாவில் பங்கேற்றனா். விழாவின் ஒரு பகுதியாக பள்ளி வளாகம் கிராமத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. காவல் தெய்வமான அய்யனாரின் எதிரில் பொங்கலிடப்பட்டது.
இதையடுத்து மாணவா்கள் ஆன்லைன் வழியாக கிராமிய நடனம், நாட்டுப்புறப் பாடல் போன்றவற்றை நிகழ்த்தி தங்களின் திறமையை வெளிப்படுத்தினா். இதைத் தொடா்ந்து ஆசிரியா்களின் கும்மிப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், பள்ளித் தாளாளா் ஜி.மணி, முதல்வா் கே.கே.கணேஷ், துணை முதல்வா் ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.