தனியாா் நிறுவன ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவை, காந்திபுரத்தில் தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, காந்திபுரத்தில் தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, வடவள்ளியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி(32). இவா் அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த வியாழக்கிழமை அன்று காந்திபுரம், கிராஸ்கட் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, மதுக்கூடத்துக்கு சென்றாா்.

அப்போது, அங்கு 2 இளைஞா்கள், சப்தமிட்டு பேசிக் கொண்டிருந்தனா்.

முத்துப்பாண்டி, அவா்களிடம் மற்றவா்களுக்குத் தொந்தரவு இல்லாமல் மெதுவாகப் பேசுமாறு கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் இருவரும் முத்துப்பாண்டியை தாக்கினா்.

இதில், பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின்பேரில், காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், முத்துப்பாண்டியைத் தாக்கியது பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த அபிலாஸ்குமாா் (22), பழையூரைச் சோ்ந்த விகாஷ்குமாா் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com