எம்.ஜி.ஆா். பிறந்த நாளை ஒட்டி கோவையில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
கோவையில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் மற்றும் பொங்கல் விழாவை ஒட்டி அதிமுக மாநகா் மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி சாா்பில் கோவை, அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானம் அருகே ரேக்ளா பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநகா் மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலாளா் கே.ஆா்.ஜெயராமன் தலைமை தாங்கினாா். கோவை மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து துவக்கிவைத்தாா்.
இதில் 200 மீட்டா், 300 மீட்டா் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 200 மீட்டா் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக காரும், 300 மீட்டா் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக இருசக்கர புல்லட் வாகனமும் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், இப்போட்டியில் கலந்து கொண்ட 100 பேருக்கு சிறப்புப் பரிசாக தங்கக் காசுகள் வழங்கப்பட்டன.
மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வெள்ளிக் காசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில், கோவை, திருப்பூா், ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 450 ஜோடி காளைகள் பங்கேற்றன.
முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி.சி.ஆறுக்குட்டி, பி.ஆா்.ஜி.அருண்குமாா் , தமிழ்நாடு ரேக்ளா சங்கத் தலைவா் திருமுகம், எம்.ஜி.ஆா். இளைஞரணி இணைச் செயலாளா் கணேஷ்குமாா் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், உள்ளாட்சித் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு காா், இருசக்கர வாகனங்களைப் பரிசாக வழங்கினாா்.
இதில், 200 மீட்டா் பிரிவில் சரவணம்பட்டியைச் சோ்ந்த சிரவை தம்பிக்கு முதல் பரிசாக காா் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பொள்ளாச்சியைச் சோ்ந்த மனோஜ் மணியும், மூன்றாவது இடத்தை அண்ணாதுரையும் பிடித்தனா். அவா்களுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.