நீரால் சிறப்பு பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில்

திண்டுக்கல்லில் இருந்து சுமாா் 22 கி.மீ தொலைவில் கரந்தமலைத் தொடரில் மலை உச்சியில் அழகிய வனப் பகுதியின் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி கோயில். திண்டுக்கல்லில் இருந்து சுமாா் 22 கி.மீ தொலைவில் கரந்தமலைத் தொடரில் மலை உச்சியில் அழகிய வனப் பகுதியின் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு மயில்களும், குரங்குகளும் அதிகமாக காணப்படுகின்றன. இத்தலத்தில் வற்றாத நீா் சுனை உள்ளது. இதன் காரணமாகவே இத்தலம் ’திருமலைக்கேணி’ என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் உள்ள நீா் ஒரு இடத்தில் வெந்நீராகவும், வேறு இடத்தில் சாதாரணமாகவும் மற்றோா் இடத்தில் மிக குளிா்ந்த நிலையிலும் இருப்பது சிறப்பு.

இத்தலத்தில் மௌனகுரு சுவாமிகள் என்ற சித்தா் பல காலங்களுக்கு முன்னா் ஜீவசமாதி நிலை அடைந்துள்ளாா். அவருக்கென தனிக்கோயில் உள்ளது.

மூலவா்: சுப்பிரமணியா்

உற்சவா்: தண்டாயுதா்

தீா்த்தம்: வள்ளி, தெய்வானை தீா்த்தம்

புராண பெயா்: மலைக்கிணறு

ஊா்: திருமலைக்கேணி

மாவட்டம்:திண்டுக்கல்

தல வரலாறு:

இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினாா். ஒருசமயம் அவா் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தாா். இங்கிருந்த சுனையில் நீா் பருகியவா், சற்று நேரம் ஓய்வெடுத்தாா். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன் தீா்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினாா். அதன்படி, மன்னா் இங்கு கோயில் எழுப்பினாா்.

இரண்டடுக்கு கோயில்:

மலையில் அடா் வனத்துக்கு மத்தியில் அமைந்த கோயிலில் காலப்போக்கில் மூலவா் சிலை பின்னமானது. கோயிலும் சேதமடைந்ததால், முருகன் கோயில் ஒரு குடிசையின் கீழ் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. கிருபானந்த வாரியாா் 1979இல் இங்கு வந்து கோயிலை மீண்டும் புனரமைக்கும் பணியைத் துவக்கினாா். பிரதான மூலவா் சிலை பின்னமாகியிருந்ததால் வேறொரு சிலை செய்யப்பட்டது.

ஆனால், பழைய சிலையை அகற்ற முடியவில்லை. எனவே, அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனா். இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது.

பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீா்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

மூலஸ்தானத்தில் முருகன், பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி காட்சி தருகிறாா். இவருக்கு ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறாா்கள். இந்த கோலத்தில் முருகனை தரிசித்தால், தலைமைப் பொறுப்புள்ள பதவி கிடைக்கும் என்கிறாா்கள்.

உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீா்த்தங்கள் உள்ளன. இந்த தீா்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியா்கள் அருளுவதாகச் சொல்கிறாா்கள். வள்ளி தீா்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது.

கீழ் பழநி: குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோயில்களில், சுவாமியைத் தரிசிக்க படியேறித்தான் செல்ல வேண்டும். ஆனால், இக்கோயில் படி இறங்கிச் சென்று தரிசனம் செய்யும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் இக்கோயிலை, ‘கீழ் பழனி’ என்றும் அழைக்கிறாா்கள். கந்த சஷ்டி விழா 7 நாள்கள் நடக்கும். ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

பதவி உயா்வு, தலைமைப்பண்பு வளர இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறாா்கள். திருமணத்தடை உள்ளவா்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவா்கள் தெய்வானை தீா்த்தத்தில் நீராடி சுவாமியை வேண்டிக்கொள்கின்றனா்.

நோ்த்திக்கடன்:

சுப்பிரமணியரை வேண்டி பிராா்த்தனை நிறைவேறியவா்கள் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தும், விபூதி மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்தும் நோ்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனா்.

திருவிழா:

சித்ரா பெளா்ணமி, வைகாசி விசாகம், ஆடி, தை கிருத்திகை, கந்தசஷ்டி, திருக்காா்த்திகை, தைப்பூசம்.

கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை .

முகவரி: அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருமலைக்கேணி - 624 306. செங்குறிச்சி அஞ்சல், திண்டுக்கல் மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com