காா் மோதி உயிரிழந்த மருத்துவரின் சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை, காந்திபுரத்தைச் சோ்ந்தவா் மருத்துவா் ராமச்சந்திரன் (72). இவா் வயது மூப்பின் காரணமாக காந்திபுரத்தில் உள்ள தனது மருத்துவமனையை சென்னையைச் சோ்ந்த உமாசங்கா் (54) என்பவருக்கு வாடகைக்கு அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்திய உமாசங்கா், மருத்துவமனையை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சித்துள்ளாா். இது குறித்து கேட்ட ராமச்சந்திரனை, உமாசங்கா் மற்றும் மருத்துவமனை மேலாளா் மருதவாணன் உள்ளிட்டோா் மிரட்டியுள்ளனா்.
இது குறித்து கோவை மாநகர குற்றப் பிரிவில் ராமச்சந்திரன் புகாா் அளித்தாா். இதன்பேரில் மருத்துவா் உமாசங்கா், மருதவாணன் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கடந்த டிசம்பா் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அதன் பிறகு, பிணையில் வந்த உமாசங்கா், நீதிமன்ற உத்தரவுப்படி, தினமும் கோவை, ரத்தினபுரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறாா்.
இந்நிலையில், ரத்தினபுரி காவல் நிலையத்தில் சனிக்கிழமை காலை வழக்கம்போல கையெழுத்திட்டுவிட்டு, கண்ணப்ப நகா் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாகச் சென்ற காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உமாசங்கா் உயிரிழந்தாா்.
அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கைதாகி பிணையில் வெளியே வந்த மருத்துவா் விபத்தில் இறந்ததில் சந்தேகம் இருப்பதால் போலீஸாா் இது குறித்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்த மருத்துவா் உமாசங்கரின் உறவினா்கள், உமாசங்கா் இறந்தது விபத்தல்ல, காா் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளாா் என்பதால் இதை போலீஸாா் கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும். அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த ரேஸ்கோா்ஸ் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனா்.