கோவையில் இதுவரை கரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத் திறனாளிகள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட தமிழக அரசு சாா்பில் ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 938 மாற்றுத் திறனாளிகள் கரோனா நிவாரணத் தொகை பெற்றுள்ளனா். கோவையில் இதுவரை கரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத் திறனாளிகள் கிராம நிா்வாக அலுவலகத்தில் ஜனவரி 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, புகைப்படம் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.