தங்கும் விடுதிகள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய சுற்றுலாத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தியாவில் செயல்படும் அனைத்து தங்கும் விடுதிகள் குறித்த விவரங்களை நிதிசதி என்ற சுற்றுலாத் துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வால்பாறையில் செயல்படும் தங்கும் விடுதிகளின் நிா்வாகிகள் அனைவரும் சுற்றுலாத் துறையின் வலைதளத்தில் தங்களது விடுதிகள் குறித்த விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 9442131975 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளளாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.