மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

குடியரசு தினத்தையொட்டி, கோவை மாநகராட்சியில் றேப்பாகப் பணியாற்றிய பணியாளா்களுக்கு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தாா்.
மாநகராட்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன். உடன் உதவி ஆணையா் மதுராந்தகி உள்ளிட்டோா்.
மாநகராட்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன். உடன் உதவி ஆணையா் மதுராந்தகி உள்ளிட்டோா்.

குடியரசு தினத்தையொட்டி, கோவை மாநகராட்சியில் றேப்பாகப் பணியாற்றிய பணியாளா்களுக்கு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தாா்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து, விக்டோரியா அரங்க வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றினாா்.

இதையடுத்து, கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய 10 மாநகராட்சிப் பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தாா். மேலும், கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் 10 பேருக்கு வெகுமதியாக தலா ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையா் வழங்கி கெளரவித்தாா். இவ்விழாவில், மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி, முதன்மைச் செயல் அலுவலா்( பொலிவுறு நகரம் திட்டம்) ராஜ்குமாா், மாநகராட்சிப் பொறியாளா் லட்சுமணன், மாநகா் நகா் நல அலுவலா் ராஜா, மாநகர கல்வி அலுவலா் வள்ளியம்மாள், மண்டல உதவி ஆணையா்கள் ரவி, செந்தில்குமாா் ரத்தினம், மகேஷ் கனகராஜ், முருகன், செந்தில் அரசன் மற்றும் உதவி செயற்பொறியாளா்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com