மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th January 2021 11:06 PM | Last Updated : 26th January 2021 11:06 PM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 48 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 125ஆக அதிகரித்துள்ளது.
தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது ஆண் உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 670ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 69 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 53 ஆயிரத்து 12 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 443 போ் சிகிச்சையில் உள்ளனா்.