கோவையில் மேலும் 51 பேருக்கு கரோனா
By DIN | Published On : 28th January 2021 07:11 AM | Last Updated : 28th January 2021 07:11 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 176 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கோவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 670 போ் உயிரிழந்துள்ளனா்.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 65 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 53 ஆயிரத்து 77 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 429 போ் சிகிச்சையில் உள்ளனா்.